பிரான்ஸ் நாட்டில் குடியேற விரும்புபவர்கள் மாறுபட்ட சோதனைக்கு தயாராக வேண்டும் என்று பிரான்ஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெய்லி ஸ்டார் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் தொலைக்காட்சி கோபுரமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்தால் மட்டுமே பிரான்ஸ் குடியுரிமையை பெற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விகள் கடினமாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
