அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று, இலங்கைக்கெதிராக கொண்டுவரும் தீர்மானம் தொடர்பான கலந்துரையாடுவதற்கு புதுடெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளிலேயே அமெரிக்கா இறங்கியுள்ளது. இதுபற்றி இந்திய அரசுடன் பேச்சு நடத்தவே உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளதாக குறித்த அதிகாரிகள் குழு, புதுடெல்லியில் யாருடன் பேச்சு நடத்தினர் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
