அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கைக்குத் திரும்பிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஆஸி. மெல்பேர்ன் நகரிலுள்ள ஹோட்டலொன்றின் மீது வழக்குத் தொடுப்பதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்தபோது தான் கீழே விழுந்து காயமுற்றமை தொடர்பாகவே அவர் வழக்குத் தொடரவுள்ளார்.
மெல்பேர்னில் நான் தங்கியிருந்த ஹோட்டல் கோமோவுக்கு எதிராக நான் வழக்குத் தொடரவுள்ளேன். அந்த விபத்திற்கு மேற்படி ஹோட்டல் பொறுப்பேற்க வேவண்டும் என அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார்.
கடந்த பெப்ரவரி மாதம் மேற்படி ஹோட்டல் பல்கனியில் அமைச்சர் ரம்புக்வெல்ல நின்றுகொண்டிருந்தபோது கதவு பூட்டிக்கொண்டமை குறித்து ஹோட்டல் ஊழியர்களுக்கு தெரிவிக்க அவர் முற்பட்டபோது அவர் அங்கிருந்து கீழே விழுந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றது.
இவ்விபத்தின் காரணமாக அவருக்கு அவுஸ்திரேலிய வைத்தியசாலையொன்றில் பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.