தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்றையதினம், இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் உள்ளிட்ட ராஜதந்திரிகளை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, இனப்பிரச்சினை தீர்வு பிரச்சினைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை, கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்கும் போது, எடுத்துக் கொள்ளப்படும் என, ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
