போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரனினால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றச் செயல்களுடன் ருத்ரகுமாரனுக்கு தொடர்பு காணப்படுகின்றது.
ருத்ரகுமாரன் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ருத்ரகுமாரன் ஐந்து தடைவகள் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரபாகரனுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும் ருத்ரகுமாரன் கடமையாற்றியுள்ளார் என திவயின குற்றம் சுமத்தியுள்ளது.