பிரித்தானியாவின் One World Media awards எனப்படும் புகழ்பெற்ற ஊடக விருது விழாவில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற இந்த விழாவில், இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சிக்கான விருதையும், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வென்றுள்ளது.
இந்த விருதுகளைத் தெரிவு செய்த இரு நடுவர்களும் சனல் 4 தொலைக்காட்சி துணிச்சல் மிக்கதும் அசாதாரணமானதுமான முயற்சியை பாராட்டியுள்ளனர்.
கண்டிப்பாக பதிலளிக்கப்பட வேண்டிய கொடூரங்களை சனல்4 தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், இந்த ஆவணப்படம் மூலம் இந்தக் கொடூரங்கள் அனைத்துலக கவனத்தை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.