சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நடராஜன், கள்ளக்காதலில் சிக்கி தனது மனைவி விஜயலட்சுமியை படுகொலை செய்ததன் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் தமிழக பொலிஸார் விஜயலட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதன்படி அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தன்னிடம் படிக்கும் மாணவிகளுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதை தட்டிக் கேட்டதால் விஜயலட்சுமியை கொடூரமாக கொலை செய்தேன் என நடராஜன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய திருப்பமாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்தினி கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் நடராஜனுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த சித்ரா, சென்னையை சேர்ந்த கீர்த்தினி ஆகிய 2 மாணவிகளுடன் தொடர்பு இருந்தது. 2 பேருடனும் அவர் உல்லாசம் அனுபவித்து வந்தார்.
பொலிஸார் அவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்த போது சித்ராவுக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாணவி கீர்த்தினியிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
நடராஜன் பயன்படுத்தி வந்த சிம்கார்டு கீர்த்தினி பெயரில் உள்ளது. இதுபற்றி கேட்டதற்கும் அவர் பதில் ஏதும் கூறவில்லை.
இவர் முன்பிணை கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இதனால் பேராசிரியர் மனைவி கொலையில் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இன்று காலை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்படுகிறார்.
கைதான கீர்த்தனி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக். படித்து வருகிறார். பேராசிரியர் மனைவி கொலையில் கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.