.

Home » » தமிழ்க் கல்வெட்டுக்கள் பொலநறுவையில் கண்டுபிடிப்பு

தமிழ்க் கல்வெட்டுக்கள் பொலநறுவையில் கண்டுபிடிப்பு


பொலநறுவையில் அமைந்திருக்கும் மூன்று ஆலயங்களில் உள்ள வாசிக்கப்படாத கல்வெட்டுக்களை பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார்.
பொலநறுவையில் மூன்றாம், ஐந்தாம் சிவாலயம் மற்றும் நான்காம் விஷ்ணு கோவில் என்பற்றில் இச் சாசனங்கள் கண்டுபடிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேராசிரியர் இந்த தகவலை தெரிவித்தார்.

இச்சாசனங்கள் பல வருடங்களுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. காலஓட்டத்தில் எழுத்துக்கள் இயற்கை காரணிகளால் சிதைவடைந்துள்ளன.



எனினும் நுட்பமான முறையில் படிமம் எடுக்கப்படும் பட்சத்தில் அவற்றில் எழுதப்பட்டிருப்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என பேராசிரியர் சி. பத்மநாதன் தெரிவித்தார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved