இந்தியாவில் இனி யாராவது பாலியல் குற்றத்தில் சிக்கினால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது.
அத்துடன் ஆசிட் வீசும் நபர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.