.

Home » » வெள்ளைக் கொடி இரகசியங்களை கக்கினார் நம்பியார் !

வெள்ளைக் கொடி இரகசியங்களை கக்கினார் நம்பியார் !

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகரும், உயர் அதிகாரிகளில் ஒருவரான விஜய் நம்பியார் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக சில விபரங்களை வெளிப்படுத்தி உள்ளார். சிரியாவில் மெரி கொல்வின் இறந்த பின்னர், இன்னர் சிற்றி பிரஸ் பத்திரிகைக்கு கருத்துக் கூறியபோதே சில தகவல்களை இவர் கூறி இருக்கின்றார்.

இவர் இப்பேட்டியில் தெரிவித்து இருப்பவை வருமாறு:

அமெரிக்காவை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, ஊடகவியலாளர் மேரி கொல்வின் கடந்த வாரம் சிரியாவில் கொல்லப்பட்டு உள்ளார் அல்லவா ? இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் கொல்வின் என்னுடன் தொடர்பில் இருந்து உள்ளார். புலிகள் இயக்க தலைவர்கள் சிலரின் சரணடைதல் தொடர்பாக அவர் மத்தியஸ்தத்தில் ஈடுபட முயன்று இருந்தார். என்னுடன் பேசினார். நான் அவரை இலங்கை செல்லச் சொன்னேன். அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் ஓ பிளேக்குடன் இது சம்பந்தமாக இரு தடவைகள் தொடர்பு கொண்டு பேசியிருந்தேன் என நம்பியார் தெரிவித்துள்ளார்.

நானும் கொல்வினும் இலங்கை வர திட்டமிட்டு இருந்தோம். ஐ.சி.ஆர்.சியை சேர்ந்தவர்கள் கடல்வழியாக வர இயலாது இருந்தது. ஆனால் அவர் இலங்கை வருகின்றமைக்கான அனுமதியை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதனால் எம்மால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. (அதாவது மெரி கொல்வின் செல்லமுடியாமல் போனதால் தானும் செல்ல முடியவில்லை என்கிறார் நம்பியார்) சாட்சியங்கள் இருக்கவில்லை, சரண் அடைய முயன்றவர்கள் இறந்து போனார்கள். நடுநிசியில் எனக்கு கொல்வின் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இருந்தார். இருவர் சரண் அடைய விரும்புகின்றனர் என்று தெரிவித்தார். இவர்களின் பெயர்களை நான் இப்போது மறந்து விட்டேன். ஒருவர் புலிகளின் சமாதான செயலகத்தை சேர்ந்தவர். உத்தரவாதம் வேண்டும் என்று கேட்டு இருந்திருக்கின்றனர். ( ஆனால் 2வரும் புலிகளின் சமாதனச் செயலகதைச் செர்ந்தவர்கள்) 

நான் ஆவன செய்து தரப்படும் என்று சொல்லி இருந்தேன். நான் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசினேன். சரண் அடைகின்ற ஏனையோரைப் போலவே இவர்களும் நடத்தப்படுவார்கள் என்று வாக்குறுதி வழங்கினர். ஆனால் அப்படி நடக்கவில்லை. சொந்த ஆட்களாலேயே (புலிகளாலேயே) இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம். இதைத்தான் பசில் ராஜபக்ஸவும் சொன்னார். பிரதானமாக மஹிந்த ராஜபக்ஸ, கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரும் சொன்னார்கள். வெளிவிவகார அமைச்சுச் செயலாளராக இருந்த பாலித கோஹணவுடன் பேசி இருந்தேன், இவ்வாறு சற்றும் கூச்சமினி நம்பியார் தெரிவித்துள்ளார். அதவது இலங்கை அரசு சொல்லியுள்ள கருத்தை மட்டும் இவர் பிரதிபலித்துள்ளார்.

இறந்த மூத்த ஊடகவியலாளர் மெரி கொல்வின், மிகவும் தெளிவாக சரணடைதல் குறித்து தனது கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார். அதில் வெள்ளைக்கொடியுடன் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் செல்லவிருக்கின்றனர் என்பதனையும், அவர்கள் சரணடைவது குறித்து தென்னாபிரிக்காவில் உள்ள புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்கள் தன்னுடன் பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில், புலித்தேவனையும் ப.நடேசன் அவர்களையும் விடுதலைப் புலிகள் தான் சுட்டுக்கொன்றார்கள் என நம்பியார் தெரிவித்துள்ளமை, மிக வேடிக்கையான விடையம் ஆகும். அத்தோடு புலிகளின் அரசியல் தலைவர்களை இலங்கை இராணுவமே சுட்டது என மெரி கொல்வில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதனைப் பற்றி நம்பியார் வாயே திறக்கவில்லை அது ஏன் ?
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved