.

Home » » ஆந்திராவில் வளர்ந்து வரும் “வாலு”

ஆந்திராவில் வளர்ந்து வரும் “வாலு”

சிம்புவின் 'வாலு' ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடித்து வரும் 'வாலு' படத்தினை அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கி வருகிறார். படத்தின் கதைப்படி சிம்புவின் அப்பா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். அதனால் ரயில்வே காலனி, ரயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் 60% காட்சிகள் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

எனவே, தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தினரிடம்  ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வாடகைக்கு கேட்டு இருக்கிறர்கள். அதற்கு ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று விளம்பரம் செய்துவிட்டதால், நேரடியாக South Central Railway நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் உடனே ஹைதராபாத் பக்கத்தில் உள்ள ஸ்டேஷன் ஒன்றை கொடுத்துள்ளார்கள்.

ஹைதராபாத் தனது நண்பன் மனோஜ் ஊர் என்பதால் சிம்பு உடனே ஒ.கே சொல்ல, 'வாலு'வை வளர்க்க அங்கு சென்று விட்டார்கள்.

பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். தற்போது 'வாலு' வேகமாக ஹைதராபாத்தில் வளர்ந்து வருகிறது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved