சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவது தன்னுடைய கனவு என்றும், ஆனால் அது எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை என இயக்குநர் கே.வி ஆனந்த் தெரிவித்தார்.
கொலிவுட்டின் சூப்பர்ஹிட் இயக்குனர்களில் கே.வி.ஆனந்தும் இணைந்து விட்டார்.திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, இயக்குனராக தன்னை மெருகேற்றிகொண்டவர் கே.வி.ஆனந்த்.
அயன், கோ என இரண்டு வெற்றிப்படங்களை தந்த கே.வி.ஆனந்தின் தற்போதைய படைப்பு மாற்றான். டிரைலரில் கலக்கும் மாற்றானின் கதை இரட்டை குழந்தைகள் பற்றியதாகும்.
இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆனந்த் இயக்கப்போவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்தார்.
இப்போது மீண்டும் அதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இது குறித்து கே.வி.ஆனந்த், ரஜினி மிக எளிமையான, அருமையான மனிதர். அவரைப் போல ஒருவரை சினிமாவில் மட்டுமல்ல, உலகிலேயே பார்க்க முடியாது. அவருடன் பணியாற்றுவது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.
வெகுநாட்களுக்கு முன்பு, படம் குறித்து ரஜினி என்னிடம் பேசினார். ஆனால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்லும் நிலையில் இல்லை. ரஜினியை இயக்க வேண்டும் என்றால் சரியான கதை வேண்டும். அந்தக் கதை அவருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்றார்.