வடக்கில் இடம்பெறுகின்ற நிலப் பறிப்புகளைத் தடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
பண்டார வன்னியனின் 208 ஆவது நினைவுதினம் வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதராதலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.