.

Home » » புலிகளின் ஆயுதங்களை தேடி வடமராட்சியில் படையினர் பாரிய தேடுதல் வேட்டை

புலிகளின் ஆயுதங்களை தேடி வடமராட்சியில் படையினர் பாரிய தேடுதல் வேட்டை


யாழ். வடமராட்சி கற்கோவளம் புனிதநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடும் வேட்டையில் சிறிலங்காவின் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ச்சியாக இரவு பகலாக இராணுவத்தினது பொறியியல் பிரிவும் விசேட தேடுதல் குழுவும் இணைந்து இவ்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இத்தேடுதல் காரணமாக பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு பற்றைக் காணிகள் பாவனையற்ற பகுதிகளில் இராணுவத்தினர் நிலத்தையும் தோண்டி தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் எந்தவிதமான வெடிபொருட்களையும் படையினர் மீட்காத போதும் தொடர்ச்சியாக அப்பகுதியில் தேடுதல் நடடிவக்கைகளில் படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

படையினரது இந்த நடவடிக்கை காரணமாக பொது மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். அத்துடன் அப்பிரதேசத்திலுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved